Monday, March 16, 2009

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.






மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது.
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?
இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான்.
இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம்.
அதற்கு விடையாக,
படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும்,
படம்-2 . A. முகத் தோற்றத்தையும்,
B அதன் நுண்ணிய கண்களையும்,
C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம்.
ஸுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

ஆதாரம்: அல்மஃரிபீ பில்குர்ஆனில் கரீம்.காம்,
http://www.vp.rghh.com/

ஒட்டகம் - உட்புறத்தின் இறைவனின் மெகா செட்டப்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لِّأُوْلِي الألْبَابِ

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 3:190.


ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !


ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நாது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
ஒட்டகம் என்ன ?
மனிதனுடைய நிலையே அது தான் !

மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.

இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும் ( நவூது பில்லாஹ் - அல்லாஹ் நம்மை காக்க வேண்டும் )

அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ?
அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும்.

எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.

ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ> நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.

நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது.

வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் . வேகஸ் நரம்பு - தமிழ் விக்கிபீடியா

இது சாத்தியப்படுமா ?

வாய் வழியாக அருந்தி நாக்கு அதனுடைய சுவையை உணர்ந்து இறப்பைக்கு அனுப்பினால் தான் பசியும்> தாகமும் அடங்கியதாக உணர்வுகள் ஏற்படும் என்ற ஞாயமான சிந்தனை எழலாம்.

சூழ்நிலைக்கொப்ப மாற்றங்கள் செய்தே ஆகவேண்டும் உதாரணத்திற்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் ஒருவருக்கு வாய் திறந்து உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டால் வாய் திறந்து அவரால் உணவு உண்ண முடியாது என்பதற்காக அவரை அப்படியே வைத்து சிகிச்சை அளிப்பதில்லை அவர் பூரண குணம் அடையும் வரை டியூப் மூலம் மூக்கின் வழியாக திறவ உணவுகள் நேரடியாக இறப்பைக்கு அனுப்பப்படுகிறது அவ்வாறு அனுப்பப் பட்டால் தான் அவரால் முழு சிகச்சைப் பெற முடியும் மருத்துவர் அளிக்கின்ற ஹெவிடோஸ் களுக்கு வயிறு காலியாக இருந்தால் சிகிச்சைக்காக அளிக்கப்படுகின்ற மருந்துகளே நோயாளிகளுக்கு மரணமாக மாறிவிடும்.

டியூப் மூலம் மூக்கின் வழியாக உணவேற்ற முடியும் என்று மனிதனே சிந்தித்தால் ?
மனிதனைப் படைத்த இறைவன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும், நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான்.

இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால்> நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ> நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.

இன்று மனிதன் கண்டுப் பிடிக்கும் எலக்ட்ராணிக் உபகரணங்களில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த ஒயர்களைப் பொருத்த வேண்டும், அவைகளை சீராக இயக்குவதற்கான ஸ்விட்சை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பனவற்றை துல்லியமாக கண்டுப் பிடித்து அமைக்கிறான்.

மனிதனே இப்படி என்றால் ?
அவனைப் படைத்த படைப்பாளன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

உயிரிணங்களின் உடலுக்குள் எந்தெந்த இடத்தில் எவ்வாறான உறுப்புக்களைப் பொருத்தி அந்தந்த உறுப்புகள் இயங்குவதற்கான நரம்புகளை அமைத்து எந்தெந்த நரம்புகளுக்கு எந்தெந்த உறுப்புக்கள் என்பனவற்றை இயக்குவதற்கு மூளை என்ற ஒரே ஸ்விட்சை இறைவன் அமைத்தான் சுப்ஹானல்லாஹ்.

மனித மூளை என்பது மனிதரின் மையநரம்புத் தொகுதியினுடைய மையமும், சுற்றயல் நரம்புத்தொகுதியினுடைய அடிப்படை கட்டுப்பாட்டு நிலையமுமாகும். மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும், மனிதரின் இச்சை இன்றிய செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளை சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனித மூளை - தமிழ் விக்கிபீடியா (Tamil ...
கோவேறு கழுதைகள், மாடுகள் போன்ற பாரம் சுமந்துப் பயணிக்கும் வனவிலங்குகளில் மற்ற விலங்குகளிலிருந்து மலைக்கும் முகடுக்கும் உள்ள அளவு ஒட்டகம் வித்தியாசப்படுகிறது.

வித்தியாசப்படுவதால் தான் இறைவன் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யக் கூறுகிறான்.

எங்கெல்லாம் வித்தியாசம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இறைவனின் அத்தாட்சிகள் இருப்பதைக காணலாம் என்று இறைவனேக் கூறுகிறான். 3:190. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

உதாரணத்திற்கு ஒட்டகமும், ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றுப்போல் காட்சி அளித்தாலும் அதனுடைய உட்புற உறுப்புக்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி அதனுடைய செயல்பாடுகளில் பாரிய மாற்றத்தை இறைவன் ஏற்படுத்தினான். பாரப்பதற்கு ஒன்றுப் போல் இருப்பவைகள் குணநலன்களில், நடைமுறைகளில் மாறுபடும்பொழுது தான் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பது ஊர்ஜிதமாகும். இல்லை என்றால் எல்லாம் தாமாகத் தோன்றியவைகளே, ஒன்ற மற்றொன்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் என்ற டார்வினிஸக் கொள்கையை பெரும்பாலான மக்கள் ஏற்றிருப்பார்கள்.

இன்னும் உதாரணத்திற்கு மற்றொறு சான்று கடல் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும், அதனுடைய நீரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ஆனால் அதில் உப்பு நீர் தனியாவும், சுவையான நீர் தனியாகவும் இருக்கிறது அது இரண்டும் ஒன்று சேராதவாறு இறைவன் தடுப்பை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறவே வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் திண்ணைப் பள்ளியில் சென்று பாலர் பாடம் கூடப் படிக்காத முஹம்மது நபிக்கு 1400 வருடங்களுக்கு முன் இறைவன் கூறினான். அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (25:53)

மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப்பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றான்.

இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலைஇ உப்பின்தன்மை,அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது. ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளார். http://islamworld.net/docs/it-is-truth/SeasAndOceans.html

அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் அற்புதப படைப்பாகிய ஒட்டக அதிசயத்தை இன்னும் எழுதுவோம்.

இமயம் தொலைக்காட்யில் தினமும் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேயர்கள் இந்த பகுதியில் இன்ஷா அல்லாஹ் காணலாம்! வெளிநாட்டில் உள்ள சகோதரர்களுக்கு இமயம் தொலைக்காட்சி சரியாக தெரியாத காரணத்தினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
http://onlinepj.com/ImayamTVPrg.asp

மறைவழி மார்க்கத்தைப் பரப்புவோம் !! மனித நேயத்தை வளர்ப்போம் !!

அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப்பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன. ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச்சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார் -நபிமொழி

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

Tuesday, March 10, 2009

புதிய தேசம்

இனியொரு சுதந்திரம் காண்போம்…மண்ணறையை நோக்கி மலேகான் விசாரணை!?

மராட்டிய மாநிலம் மாலேகானில்கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம்தேதி குண்டுவெடிப்பு நடந்தது.இந்தக் குண்டுப் வெடிப்பைநிகழ்த்தியது முழுக்க முழுக்கஇந்துத்துவ பயங்கரவாதஅமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச்தான் என்பது இந்த வழக்கைவிசாரித்து வரும் யுவுளு - (யுவெi-வுநசசழசளைவ ளுஙரயன) மூலம்தெரியவந்தது. மேலும் இந்தநாசவேலையில் ஈடுபட்டுள்ளதுதொடர்பாக பெண் சாமியார்பிரக்யாசிங், ராணுவ அதிகாரிபுரோகித், சாமியார் தயானந்த்பாண்டே, ரமேஷ் உபாத்யாயா,ராகேஷ் தவாடே, சுதாகர்சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னிஉள்பட 11 பேரை மராட்டிய மாநிலதீவிரவாத தடுப்புப் படை கைதுசெய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மும்பை தீவிரவாததாக்குதலின் போது படுகொலைசெய்யப் பட்ட மகராஷ்ட்ராவின்தீவிரவாதத் தடுப்புப் படையின்தலைவரான ஹேமந்த் கர்கரேயின்படுகொலைக்கு பிறகு 90 நாட்களில்தீர்ந்துவிடும் என்று கர்கரேதன்னுடைய கடைசி பேட்டியில்உறுதியாக சொன்ன மாலேகான்வழக்கின் கதி என்ன வாகும்?என்ற நாட்டு மக்களின்கவலையை நிஜமாக்கும் விதத்தில்சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத்தடுப்புப் படையின் தற்காலிகத்தலை வராக கே.பி. ரகுவன்ஷிஎன்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்தநெருடலான சர்ச்சைக்குரியதகவல்கள் வெளிவந்த வண்ணம்உள்ளன.

ஜனவரி 22, 2008 ஆம்ஆண்டு ஹேமந்த் கர்கரேதீவிரவாதத் தடுப்புப் படைதலைவராக பொறுப்பு ஏற்றார்.அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் யுவுளு-ன் தலைமைப்பொறுப்பில் இருந்து வந்தார்.அப்போது அத்தனை தீவிரவாதவழக்குகளிலும் முஸ்லிம்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைமட்டுமே வளைத்துப் பிடித்துவிசாரித்தவர்தான் இந்த பாசிசசங்பரிவார் கூட்டாளி கே.பி.ரகுவன்ஷி.

மாலேகான்குண்டுவெடிப்பு வழக்கில்தொடர்புடைய முக்கியகுற்றவாளியான ராணுவத்தைச்சேர்ந்த அதிகாரி கர்னல்புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர்இவர் என்பதும் இப்போது தெரியவந்திதுள்ளது.

ஷிவானந்த் திவாரியின் கருத்து:-

இந்த திடுக்கிடும் தகவல்களைமேற்கொள் காட்டி ரகுவன்ஷியைதீவிர வாதத் தடுப்புப் படைத்தலைவர் பதவியை விட்டு நீக்கவேண்டும் என ஐக்கிய ஜனதாதளராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த்திவாரி வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

ரகுவன்ஷிதீவிரவாதத் தடுப்புப் படைத்தலைவராக ஹேமந்த் கர்கரேபொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவிவகித்து வந்தார். ஏறக்குறையமூன்று ஆண்டுகள் அந்தப் பதவியைவகித்து வந்தார். 2005 ஆம் ஆண்டுதீவிரவாதத் தடுப்புப் படைதலைமையகத்துக்கு வந்து உளவுஎடுப்பது குறித்து வகுப்புஎடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்குரகுவன்ஷி அழைப்பு விடுத்த தாகவும்குறிப்பிட்ட ஷிவானத் திவாரிஇரகுவன்ஷியை உடனடியாக நீக்கவேண்டும் என கடுமையாகக்கருத்து தெரிவித்தார்.

போலீஸ் காவலுக்கு அனுமதிமறுப்பு:-

இந்த நிலையில் இந்தவழக்கில் குற்றம்சாட்டப்பட்டபிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின்காவல் முடிவடைந்ததைதொடர்ந்துஇ அவர்கள் அனைவரும்மும்பையில் உள்ள கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ரோகிணிசாலியன் ஆஜரானார். அவர்காலம் : 1 பிப்ரவரி 2009 பொழுது : 1அத்தனை தீவிரவாதவழக்குகளிலும் முஸ்லிம்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமேவளைத்துப் பிடித்துவிசாரித்தவர்தான் இந்தபாசிச சங்பரிவார்கூட்டாளி கே.பி.ரகுவன்ஷி.மாலேகானில் குண்டுவெடிப்பதற்குமுன் குற்றம் சாட்டப்பட்டமற்றவர்களுக்கும்இ சுதாகர்சதுர்வேதிக்கும் இடையே நடந்தஉரையாடல் அடங்கிய சி.டி.யைஅவரது வீட்டில் கைப்பற்றிஉள்ளோம். மேலும் இந்த வழக்கில்தேடப்படும் ராம்ஜி கால்சங்கராஇசதுர்வேதி வீட்டில்தான் தங்கிஇருந்துள்ளார். இதுபற்றிசதுர்வேதியிடம் மேலும் விசாரிக்கவேண்டி இருப்பதால் அவருக்குபோலீஸ் காவல் வழங்க வேண்டும்என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காகபோலீஸ் காவலுக்கு அனுமதிமறுத்து பிரக்யாசிங் உள்பட 11பேரையும் வரும் 20-ஆம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார்.மேலும் தயானந்த்பாண்டே கோர்ட்டுக்கு வெளியில்வைத்து சகோதரரின் செல்போன்மூலம் தனது மகனுடன் பேசநீதிபதி அனுமதி வழங்கினார்.

இதுவே முஸ்லிம்களாக இருந்தால்அவர்களின் நிலை என்னவாகஇருந்திருக்கும் என்பதை நாம்சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உண்மை நிலை :-

இது ஏதோ மலேகானில் மட்டும்நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் -திருநெல்வேலி மாவட்டம் -தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு அருகிலும்இதுபோன்ற குண்டு வெடிப்பைச்செய்ததும் ஆர்.எஸ்.எஸ்.மதவாதிகள்தான் என்று கண்டுப்பிடிக்கப்பட்டதும். இந்த சம்பவத்தில்இந்து முன்னனியை சேர்ந்த ரவி,கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயணசர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள்கைது செய்யப்பட்டது நாம்அனைவரும் அறிந்ததே. ஆனால்,குண்டுகள் வெடித்தவுடன் அப்போதுஇதன் பின்னணியில் பாகிஸ்தானும்,இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புளுஐஆஐ-யும் இருப்பதாகச்சொல்லப்பட்டு, இஸ்லாமியத்தலைவர்கள் பலரும் ‘இந்தியஇஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம்விளைவிக்கும் இது போன்றநடவடிக்கைகளை பாகிஸ்தான்கைவிட வேண்டும்’ என்கிற ரீதியில்கண்டனம் தெரிவித்து ஒற்றுமையைவலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும்நினைவை விட்டு மாறாதவை.

தீவிரவாத எதிர்ப்பு படைக்கு புதியதலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்துஉதவிகளையும் நல்கி வந்தமஹாராஷ்டிர துணை முதல்வர்சு.சு. பாட்டிலும் தன்னுடையபதவியை ராஜினாமா செய்துள்ளார்.எனவே மாலேகான் விசாரணைஎன்ன ஆகும் என்று யுவுளு-ல்பணிபுரிபவர்களே சந்தேகம்எழுப்பியுள்ளனர்.

ஹேமந்த்கர்கரேயின் முயற்சிகள் எங்கேவீணாகி விடுமோ என்ற அச்சம்தற்கோது அனைவரையும்ஆட்கொண்டுள்ளது.‘தண்டிக்கப்படாத கிரிமினல்குற்றங்கள் மேலும் கிரிமினல்களைஉருவாக்கும்’ என்கிற குஷ்வந்த்சிங்கின் வாதத்திற்கு இன்னோர்உதாரணம். 1992-ல் தண்டிக்கப்படவேண்டியவர்கள் சரிவரதண்டிக்கப்பட்டிருந்தால் அதன்பிறகான பல தேசிய இழப்புகள்தவிர்க்கப்பட்டிருக்கும். இந்தஉண்மையை நாடும் நாட்டுமக்களும் அறியும் வரை நம்முடையலட்சியப் பயணங்கள் தொடரட்டும்.-

Monday, March 9, 2009

கியாமத் நாள் எப்படி சாத்தியமாகும்?

'அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்'. (அல்குர்ஆன் 73:4-5)

அவர்கள் எதைப்பற்றி வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனரோ அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்?) அவ்வாறன்று! அவர்கள் இனிமேல் அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.

1. அந்த நாள் எப்போது வரும்?
2. அது எப்படி சாத்தியமாகும்?
3. அப்படி என்ன தான் அந்த நாளில் நடந்து விடும்?

இவையே அவர்களின் கேள்விகள். இம்மூன்று கேள்விகளில் முதல் கேள்விக்கு இறைவன் அளித்த விடையை இதுவரை கண்டோம். 'அதை பின்னர் அறிந்து கொள்வார்கள்' என்று கூறி அது எப்போது வருமென்பதை தன்னைத் தவிர வேறெவரும் அறிய முடியாது என்று விளக்கினான்.

இரண்டாவது கேள்வி

மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் எழுப்பிய இரண்டாவது கேள்வி இது!

இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.

மக்கிய இந்த எலும்புகளை யாரால் உயிர்ப்பிக்க இயலும்? என்று மனிதன் கேட்கிறான். (அல்குர்ஆன் 37:78)

நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)

''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)

நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா? மக்கிய எலும்புகளாக நாங்கள் ஆகிவிட்டாலுமா? என்று அவர்கள் கேட்கின்றனர் (அல்குர்ஆன் 79:10,11)

அவனது எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறானா? (அல்குர்ஆன் 75:03)

இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.

இந்த கேள்விக்கு திருக்குர்ஆனின் எனைய இடங்களில் விடையளித்திருக்கிறது! இந்த அத்தியாயத்திலும் விடையளிக்கிறது! இரண்டும் வெவ்வேறு விதமான விடைகள்!

மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?

ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் பொட்டில் அறைந்தாற்போல் ஏனைய இடங்களில் திருக்குர்ஆன் இந்த கேள்விக்கு விடையளித்தது.

இந்த அத்தியாயத்தில் மனிதனின் சிந்தனையை தூண்டி நம்ப முடியாத அற்புதங்களை நினைவூட்டி மனிதன் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என பதிலளிக்கப்படுகிறது!

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:06)

மலைகளை முளைகளாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:07)

மேலும் உங்களை ஜோடி ஜோடியாக நாம் படைக்க வில்லையா? (அல்குர்ஆன் 78:08)

மேலும் உங்களின் தூக்கத்தை இளைப்பாறுதலாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:09)

இன்னும் இரவை உங்களுக்கு ஆடையாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:10)

மேலும் பகலை வாழ்க்கை வசதிகளைத் தேட ஏற்றதாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:11)
உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:12)


ஒளி வீசும் விளக்கையும் நாம் ஏற்படுத்தவில்லையா? (அல்குர்ஆன் 78:13)

மேலும் கார்மேகங்களிலிருந்து மழையை நாம் இறக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:14)

அதன் மூலம் தானியங்களையும், தாவரங்களையும் அடர்ந்த சோலைகளையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 78:15,16)

அவர்களின் கேள்விக்கு இந்த கேள்விகளையே இறைவன் பதிலாகத் தருகிறான்.

மக்கி மண்ணோடு மண்ணாக கலந்து விட்டவர்களை உயிருள்ள மனிதனாகப் படைப்பது உங்களால் முடியாது தான், உங்களில் மிகவும் பலசாலிகளாலும் முடியாதுதான். வரம்புக்குட்பட்ட ஆற்றலுள்ள மனித சமுதாயம் முழுவதும் முயன்றால் கூட அது முடியாதுதான்.

உங்களை விட பன்மடங்கு பெரியதான இநதப் பூமியை படைத்து அதை உருண்டை வடிவமாக்கி, அந்தரத்தில் மிதக்க விட்டு, அதைப் படுவேகமாக சுழலவிட்டு அதைவிடவும் வேகமாக அது சூரியனைச் சுற்றி வருமாறு அமைத்து, அந்தச் சுழற்சியையும், சுற்றுதலையும் நீங்கள் உணரமுடியாத வகையில் - தொட்டிலில் ஆடும் குழந்தை அந்த ஆட்டத்தை உணராதிருப்பது போன்று - அமைந்திருக்கின்ற சர்வ சக்தனுக்கு உங்களைத் திரும்பப் படைப்பது இயலாத ஒன்றாகி விடுமா? இதைச் செய்யப் போகிறவன் யார்? அவனது வல்லமை எத்தகையது என்பதை நீங்கள் அறிந்தால் இவ்வாறு ஆட்சேபனை எழுப்புவீர்களா?

நீங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அதே பூமியின் சில பகுதிகளை மிருதுவாகவும் சில பகுதிகளை அடர்த்தியாகவும் சில பகுதிகளை மண்ணாகவும் மற்றும் சில பகுதிகளை தண்ணீராகவும் படைத்து அதை சமன் செய்வதற்காக மலைகளையும் ஆங்காங்கே முளைக்கச் செய்த இறைவனுக்கு இது சாத்தியமாகாது என்கிறீர்களா?

நீங்கள் பல்கிப் பெருகுவதற்காக உங்களை ஆண்-பெண் என ஜோடிகளாகப் படைத்து அவ்விருவரும் ஒருவரை ஒருவர் ஈர்க்கக்கூடிய நிலையை ஏற்படுத்தி, அந்த ஈர்ப்பினால் இருவரையும் இணையச் செய்து, அந்த இணைப்பில் வார்த்தையில் வடிக்க இயலாத இன்பத்தை வைத்து, கண்ணுக்குத் தெரியாத சிறுதுளியை ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் செலுத்தி உங்களை படைத்த கடவுளுக்கு இது இயலாது என்று கூறுகிறீர்களா?

எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்று கருதும் எண்ணத்தைக் கொடுத்து, அந்த எண்ணத்தினால் சுறுசுறுப்பாக மனிதனை இயங்க வைத்து, அந்த இயக்கத்திற்கு ஏற்றவாறு பகல் பொழுதைப் படைத்து, அந்தச் சுறுசுறுப்பு வரம்பு மீறிப்போய் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து மனநோய்க்கு ஆளாகாமலும், உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமலும் இருப்பதற்காக இரவை ஏற்படுத்தி அந்த இரவில் ஓய்வைத் தேடக் கூடிய உணர்வையும் ஏற்படுத்திய அந்த நுண்ணறிவாளனுக்குக் கூட இந்த ஆற்றல் இருக்காது என்கிறீர்களா?

மனிதன் எட்டிப்பார்க்க இயலாத உயரத்தில் பலமான வானங்களை மிகவும் பிரம்மாண்டமான கூரைகளை ஏற்படுத்தி அதனால் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்திய ஆற்றலுடையவனுக்குக் கூட இது சாத்தியமற்றது என்கிறீர்களா?

உங்களுக்கு வெளிச்சத்தைத் தருவதற்காக சூரியனைப் படைத்து, மனிதனும், தாவரங்களும் வாழவும், வளரவும் வழி ஏற்படுத்தி மனிதன் பயன்படுத்தும் கழிவு நீரை உறிஞ்சி சுத்தமாக்கி நீராவியாக உயரே கொண்டு சென்று தூய நீராக மீண்டும் பூமிக்குத் திருப்பி அனுப்பி அதன் மூலம் பயிர்களை வளரச் செய்த வல்லமை மிக்கவனுக்கு இது இயலாத காரியமா?

வரண்டு செத்து விட்ட பூமிக்கு உயிர் கொடுப்பதும் இங்கிருந்த தண்ணீரை இல்லாமலாக்கி மறுபடியும் வரச் செய்வதும் மனிதன் உயிர்ப்பிக்கப்படுதல் சாத்தியம் என்பதை உங்களுக்கு விளக்கவில்லையா?மேற்கண்ட வசனங்கள் மூலம் இத்தகைய கேள்விகளை எழுப்பி இது சாத்தியமான ஒன்றே என இறைவன் பிரகடனம் செய்கிறான்.

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டால், அந்த இறைவன் எல்லாவிதமான பலவீனங்களிலிருந்தும் தூயவன் என்பதையும் அறிந்து கொண்டால், அவனது அதிகாரத்திற்கும், ஆற்றலுக்கும் எந்த எல்லையும் கிடையாது என்பதை விளங்கிக் கொண்டால், தனது வல்லமையை உலகறியச் செய்யும் வகையில் அவன் படைத்து வைத்திருக்கின்ற அதியசயங்களைப் பற்றி சிந்தித்தால் 'எப்படி உயிர்ப்பிக்க முடியும்' என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். எப்படி என்பதைச் சிந்திப்பதை விட இதைச் செய்யக் கூடியவன் எத்தகையவன் என்பதை சிந்தியுங்கள்!

அவ்வாறு சிந்தித்தால் மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கி ஒன்றுமற்றுப் போனாலும் அந்த வல்லவனால் மீண்டும் அவனை உருவாக்க முடியும் என்பதை ஐயமற உணர்வீர்கள்!

மேற்கண்ட வசனங்கள் மூலம் இதைத்தான் அவர்களின் இரண்டாவது கேள்விக்குரிய விடையாக இறைவன் தருகிறான்.