Tuesday, April 22, 2008

உலகைச்சுற்றி . . . அமெரிக்கப் படைக்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு

அமெரிக்கக் கப்பற்படையினரின் (ருளு ஆயசiநே) பாதுகாப்பு என்ற போர்வையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் அருவருக் கத்தக்கவை. ஜப்பான், தென்கொரியா, பிலிப் பைன்ஸ் என எந்த நாடுகளுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் அந்த படையினரை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடை பெறுகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை களில் அமெரிக்க வீரர்கள் ஈடுபடுவது வெட்ககரமானது. குற்றம் புரிபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூட அந்த நாடு களுக்கு உரிமையில்லை என்பது அதை விட கொடுமை யானது.

குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்கிட அமெரிக்க நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரிமை உண்டாம். அமெரிக்கப் படைகளை அனுப்ப இது முன் நிபந்தனையாக வும் போடப்படுகிறது.

1995ம் ஆண்டில் ஜப்பான் நாட்டில் 12 வயது பெண்ணை அமெரிக்க படைகள் கூட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு உள் ளாக்கியது. அதற்கு எதிராக கண்டனக் குரல்கள் உலகெங்கும் எழுந்தன. ஆனால் அமெரிக்கா எவ்வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை.

இவ் வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் ஒக்கி னாவோ மாநிலத்தில் 14 வயது பெண் அமெரிக்க கப்பல் படை யினரால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி யளிக்கக் கூடியது.

ஜப்பானிய காவல்துறை அந்தக் கயவனை கைது செய்துள்ளது.ஜப்பான் - அமெரிக்க ராணுவ ஒத்து ழைப்பு சமீப காலமாக விரிவடைந்து வருவ தால் ஜப்பானிய மண்ணில் அமெரிக்க படை யினரின் பாலியல் அத்துமீறல்களும், அராஜ கங்களும் அதிகரிக்கவே செய்யும்.

அவர்கள் முகாமிட்டுள்ள பகுதிகளில் மக்கள் நிரந்தர அச்சத்திலும், கவலையுடனும் தான் வாழ வேண்டியுள்ளது.

இதனை மனதில் கொண்டுதான் ஜப்பான் நாட்டு இடது சாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பிற ஜனநாயக சக்திகள் அமெரிக்கப் படைகளை ஜப்பானிய மண்ணை விட்டே நிரந்தர மாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

ஒக்கினாவோ சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜப்பானின் தேசிய தொழிற் சங்கங்களின் மகா சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா உட்பட உலகம் முழு வதும் உள்ள நாடுகளின் தொழிற் சங்கங்கள் இதற்கு ஆதரவாய் குரல் எழுப்பியுள்ளன.

Thanks : தீக்கதிர்

Wednesday, April 9, 2008

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?

காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.'காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும்.

முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும்.

மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.இவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா?

இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன.

முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.

Thanks : ஏகத்துவம்

Sunday, March 30, 2008

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது.

குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி;

தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி;

யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது.

"தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள்.

அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது."திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை.

ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும்.

இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது.

இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி.

வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது.

குஜராத்தில் நடந்தது யுத்தமா?"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள்.

இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது.

போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும்.

இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும்.

போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும்.

ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும்.

குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.·

ருத்ரன், மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

Thursday, March 27, 2008

பாஜக அரசின் விபரீத முயற்சி!

தமிழகத்தின் முந்தைய ஜெயலலிதா அரசு, மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. நாடா ளுமன்றத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து அந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது.

தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக அரசு ‘மதச் சுதந்திர சட்ட மசோதா -2008’ என்ற பெயரில் மதமாற்ற தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயல்கிறது.

ஏற்கெனவே இத்தகைய ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி அப்போது மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீலின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அவர் அந்த சட்டத்தை திருப்பி அனுப்பிவிட்டார்.

ஆனால், அதே சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். அவர் அப்போதைய குடி யரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பார் வைக்கு அனுப்பினார். அவர் கடைசி வரை இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், கொடூரமான விதிகளுடன் கூடிய இந்தச் சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வசுந்தரா ராஜே அரசு முயல்கிறது. மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி எந்தவொரு அறக்கட்டளை அல் லது நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. மேலும்...

யாராவது ஒருவர் மதம்மாற விரும்பினால் முப்பது நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கூறும் இந்த சட்டம், மறு மதமாற்றத்திற்கு இது தேவையில்லை என்று கூறுகிறது.

அதாவது, ஒருவர் இந்து மதத்திலிருந்து மாற விரும்பினால் நோட்டீஸ் அளிக்க வேண்டும். ஆனால், ஏற் கெனவே மதம் மாறிய ஒருவர் மீண்டும் இந்து மதத் தில் சேர விரும்பினால், நோட்டீஸ் எதுவும் அளிக்க தேவையில்லை என்று இந்த மசோதா கூறுகிறது.

இதிலிருந்தே சிறுபான்மை மக்களை ஒடுக்கி அச்சுறுத்துவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்பது தெளிவு.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25(1) இந்திய மக்களின் மதச்சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இந்திய குடி மகன் யாரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற வும், அதை பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு என்று கூறுகிறது. ஆனால், ஒருவர் மதப் பிரச் சாரம் செய்தாலே அதை மதமாற்றத்திற்கான பிரச் சாரமாக எடுத்துக் கொண்டு அவரை சிறையில் தள்ள ராஜஸ்தான் மாநில பாஜக அரசு முயல்கிறது.

இந்தியாவில் மதமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள், இந்து மதத்தில் உள்ள கொடூரமான ஜாதிய அடுக்குகளும், கொடுமை களும், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட அநீதி களும்தான் மதமாற்றத்திற்கு மிக முக்கிய கார ணமாக இருந்து வந்துள்ளது என்று கூறுகின்றனர்.இந்து மதத்திற்குள் நீடித்துக் கொண்டே தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடிய டாக்டர் அம்பேத்கார் கடைசியில் இந்தக் கட்டமைப் பிற்குள் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்று கூறி புத்த மதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்க ளோடு சென்று சேர்ந்தார்.

மத மாற்றங்களால் மட்டும் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் ஒழிந்துவிடுமா என்ற கேள்வி இப்போதும் நீடிக் கிறது. அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தேவாலயத்தில் இழைக் கப்பட்ட அநீதி இதற்கு ஒரு சான்றாகும். எனினும், நீண்ட காலமாக ஜாதிய வெப்பத்திற்குள் தவிக்கும் மக்களுக்கு மதமாற்றம் என்பது ஒரு தற்காலிக நிவாரணமாக உள்ளது என்பதை மறுப்பதற் கில்லை.

தீண்டாமைக் கொடுமை முற்றாக ஒழிய வேண்டுமானால் அடித்தட்டில் உள்ள அந்த மக்களுக்கு நிலமும், ஜனநாயகப்பூர்வ அதிகார மும் சென்று சேர வேண்டும்.ஆனால், இந்து மதத்தில் உள்ள ஜாதியக் கொடு மையை ஒழிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்காத பாஜக பரிவாரம், இன்னும் சொல்லப்போனால், சாஸ்திரம் என்ற பெயரில் இதை நியாயப்படுத்துகிற இந்தக் கூட்டம் இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முயலும் மக்களை கட்டிப்போடவே மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வருகிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை மதரீதியாக, இனரீதியாக, பிராந்திய ரீதியாக பிரித்துக் கூறுபோட மதவெறிக் கூட்டம் தயங்குவதில்லை. மும் பையில் ராஜ்தாக்கரே, பிற மாநில மக்களுக் கெதிராக விஷம் கக்குகிறார். கர்நாடகா மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ஒகேனக்கலுக்கு ஓடி வந்து ஆட்டம் போடுகிறார். இப்போது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்க முயல்கிறது.அரசு ஏற்றுக் கொண்டபடி தண்ணீர் வழங்கக் கேட்டு போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது வசுந்தராராஜே ஆட்சி. இந்த அரசின் மீது ராஜஸ் தான் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதை திசை திருப்புவதற்காகவே மதவெறியை தூண்டும் முயற்சியில் அந்த அரசு ஈடுபடுகிறது.ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள ஒரு மசோதாவை வேறுவடிவில் நிறைவேற்றுவது என்பது ஜனநாயக மரபுகளுக்கே எதிரானது.

ஜன நாயகத்தை துளியும் மதிக்காத இந்த மதவெறிக் கூட்டத்திடம் அந்தப் பண்பை எதிர்பார்க்க முடியுமா?

Monday, March 17, 2008

பாஜகவில் பயங்கர கோஷ்டி மோதல்- அடிதடியில் 2 பேர் படுகாயம்

கோவை: பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன கோஷ்டிக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோஷ்டிக்கும் இடையே கோவையில் பயங்கர அடிதடி நடந்தது.

இதில் இரு தொண்டர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியில் நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் இந்த சண்டை நடந்துள்ளது.

முன்னதாக கணேசனை ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு பேராட்டம் நடத்திய சம்பவமும் நடந்தது.சமீபத்தில் கோவை கிழக்கு மண்டல பாஜக தலைவராக இருந்த ராஜன், குனியமுத்தூர் மண்டல தலைவர் ராமமூர்த்தி, தொண்டாமுத்தூர் மண்டல தலைவர் மணிவண்ணன் ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர்.

நீக்கப்பட்டவர்கள் அனைவரும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் ஆவர்.

இவர்களுக்கு பதிலாக புதிதாக நியமனம் ஆனவர்கள் இல.கணேசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இல.கணேசன் கோவை வந்தார். அவரை சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரத் தலைவர் சவுந்தர்ராஜன், ராஜன் உள்ளிட்டோர் முற்றுகையிட்டதோடு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கட்சியினர் முன்னாள் மாநிலத் தலைவரே இப்போதைய தலைவரை முற்றுகையிட்டு கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடிதடி:

இதை சற்றும் எதிர்பாராத கணேசன், ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி தனக்கு புக் செய்யப்பட்ட ஹோட்டல் அறைக்குச் சென்றார்.அவரை சி.பி.ராதாகிருஷ்ணனும், அவரது ஆதரவாளர்களும் பின் தொடர்ந்து சென்றனர்.

இல.கணேசனின் அறைக்குள் ஆவேசமாகப் புகுந்தனர். அங்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், இல.கணேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.அதே போல இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.

இந் நிலையில் இரு தரப்பும் ஒருவரை ஒரு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இந்த அடிதடியில் தர்மராஜ், ராஜன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.காது கிழிந்து, மூக்கு உடைந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சண்டை குறித்து கேள்விப்பட்ட போலீசார் அங்கு விரையவே, பாஜகவினர் தங்களுக்குள்ளாகவே சமாதானமாகி கலைந்து சென்றனர்.

Thanks: Thatstamil

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும்: மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு


புதுடில்லி:


"மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர்.


அவர்கள் கூறியிருப்பதாவது:


மஞ்சளில்,மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,"கர்குமின்' (விதையில் உள்ள ரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை. அதில் ரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது,


மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது;


புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது;


ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது;


பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.


மஞ்சளில் உள்ள "கர்குமின்' ரசாயனம், உடலில் உள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது.


இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம். அதை இந்த ரசாயனம் தடுக்கிறது.


"ஜீன்'களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது.


எங்களின் முதல் கட்ட சோதனையில், எலிகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம்.


ஆனால்,மஞ்சளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது.


எந்த அளவு வரை பயன்படுத்தலாம் என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம்.


இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.


கனடா நிபுணர்களுக்கு முன்பே, மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்து, இதே உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.


அவர்கள் கூறுகையில்,


"கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது;


இதை நாங்கள் ஏற்கனவே சோதனை செய்துவிட்டோம்.


மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள அடர்த்தி குறைந்த கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டது தெரியவந்தது'


என்று தெரிவித்தனர்.

அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!

கரூர்: கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.

இதையடுத்து அக் கட்சியின் இளைஞரணி, மகளிரணியி்ல் உள்ளவர்களையே மீண்டும் பாசறைகளில் உறுப்பினர்களாக சேர்த்து கட்சியில் புதிதாக ஆட்கள் சேர்ந்தது போல நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விஜய்காந்த் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து வருவதையடுத்து உதறல் எடுத்த திமுக எப்போதுமில்லா அதிசயமாக இளைஞரணி மாநாட்டை நடத்தியது.

அதிமுகவும் போட்டி போட்டிக் கொண்டு தமிழகம் முழுவதும் இளைஞர் பாசறைகளையும் இளம் பெண்கள் பாசறைகளையும் தொடங்குவதாக அறிவித்தது.

இதுவரை எந்தக் கட்சிகளிலும் சேராத பதினெட்டு வயதிலிருந்து இருபந்தைந்து வயதுக்குட்பட்டவர்களை இதில் சேர்த்து அதிமுகவை பலப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி முதல் பாசறைகள் தொடங்கப்பட்டன.

ஆனால், கரூர் மாவட்டத்தில் இந்த அதிமுக பாசறைகளில் சேர போதிய இளைஞர்கள் இளம் பெண்கள் முன் வரவில்லை.இதையடுத்து ஏற்கனவே அதிமுக இளைஞரணி, மற்றும் மகளிர் அணியில் உள்ளவர்களை மீண்டும் பாசறைகளில் சேர்த்து புதிதாக கட்சியில் சேர்ந்தவர்கள் போல கணக்கு காட்டியுள்ளனர் அம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

இது தொடர்பான விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செம்மலையிடம் சில சீரியசான அதிமுக தொண்டர்கள் இது பற்றி புகார் கூறினர்.

ஆனால், நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு இப்போது தான் கட்சியில் சாப விமோச்சனம் பெற்றுள்ள செம்மலை, நமக்கு ஏன் வம்பு என்று சைலண்ட்டாகிவிட்டார்.

இதையடுத்து சில நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கணைகளை பறக்க விட்டுள்ளனராம்.

கரூரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளிலுமே இந்த 'ஜோக்' நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

Sunday, March 16, 2008

சத்தியத்தை அணைக்கவே முடியாது

இவ்வுலகத்தில் மனிதசமூகத்திற்கு நேர்வழிகாட்ட எண்ணற்ற மதங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாத்தங்கள் தோன்றின. அவற்றில் பல்வேறு வந்த வழியிலேயே சென்றுவிட்டன சில கொள்கைகள் நிலைத்து நிற்கின்றன அவற்றிலும் தூய இஸ்லாம் மட்டுமே இவ்வுலகம் அழியும் வரை நிலைத்து நின்று நேர்வழி காட்டி வெற்றிபெறும்.

அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 33)

இப்படியிருக்கையில் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை கண்டுகொள்ள முடியாமல் மாற்றார்கள் ஊடகங்களில் வாயிலாக முக்கியமாக இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இவ்வுலகத்திற்கு நேர்வழிகாட்ட வந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மீது கலங்கத்தை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் சில தவறான எண்ணங்களுடனும் யூகத்தின் அடிப்படையிலும் எடுத்துவைக்கப்படுகிறது. அவர்களுக்கு சத்தியத்தை புரிய வைக்கவும் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே மிகைத்து நின்று வெற்றிவாகை சூடும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆகவே இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் சத்தியவழிக்கு என்றைக்குமே முட்டுகட்டை போடமுடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28)

ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)

வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள்.

அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)

இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும்.

இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

இன்னொரு பக்கம் இணைவைப்பாளர்கள் நடத்துகின்ற தவறான பிரச்சாரங்கள், முஸ்லிம்களின்மீது கட்டவிழ்த்துவிடுகின்ற மனித இனப்படுகொலைகள், சமூகத்தையே தறமட்டமாக்கும் கற்பழிப்புகள், குழந்தையை வயிற்றியிலிருந்து கீறியெடுத்து கொலைசெய்கின்ற அக்கிரமங்கள், குண்டுமழை பொழிவுகளின் மூலம் நாட்டையே சுடுகாடாக்கும் கொடூரம், சத்தியவாதிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து சர்வதேச அளவில் இறைமறையோடு வாழ்பவர்களை சிறையோடு கொல்லும் அவலம், பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் பர்தாவை ஆனாதிக்கம் என்று கூப்பாடு போடும் கோழைத்தனம், முஸ்லிம்கள் முன்னேறக்கூடாது என்பதற்காக இடஒதுக்கீடை எதிர்க்கும் இறக்கமற்றச் செயல், மறையோதுவதற்காக கட்டப்பட்ட இறையில்லங்களை இடித்திடும் இழிநிலை, இஸ்லாமின் வளர்ச்சியை பார்த்து நடுங்கும் வஞ்சகம், வாய்மையால் பரப்பப்பட்ட மார்க்கத்தை வாளால் வளர்க்கப்பட்டது என்று வாதிடும் பேதிகள், சத்தியத்தில் அசத்தியத்தை கலக்கும் கடும்போக்கு, அறப்போரை அறியாமல் விளக்கம் கொடுக்கும் அறிவிழித்தனம், உண்மைவாதிகளை பழமைவாதிகளாக சித்தரிக்கும் பாசிசத்தன்மை, இறைச்சட்டங்களை ஊனச்சட்டங்களாக ஊதும் ஊடகங்கள், நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகத்தை விதைக்கும் அரக்கத்தனம், இறைவேதத்தை குறைகூறும் முறையற்ற போக்கு, இறைதூதரை கறைகொண்டு பூசும் கொடுமை, இப்படி பல செய்கையின் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடைபோட எண்ணுகிறார்கள் ஆனால் உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்.

உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம். இதற்கு சான்று பகர்க்கும் முகமாக சில முக்கியமான நபர்கள், பத்தரிக்கைகள் கூறும் கூற்றை இங்கு பார்ப்போம்.

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது, இது நம்முடைய பல்வேறு மக்களின் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் நிலைப்பாட்டுக்கும் காரணமாக அமைந்துள்ளது. (அமெரிக்க அதிபர் கிளின்டனின் மனைவி ஹில்லாரி கிளின்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி, மே 31,1996. பக்.3)

இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற குழுவாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.(மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக்க குறிப்பு, USA Today பத்திரிக்கைக் குறிப்பு, பிப்ரவரி 17,1989 பக் 4A)

இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற மதமாக இருக்கின்றது. (ஜெரால்டின் பாம், நியூஸ் டே பத்திரிக்கையின் மதம் பற்றிய எழுத்தாளர், மார்ச் 07, 1989 பக். 4).

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது. (ஆரி டு. கோல்டுமேன், நியூயார்க் டைம்ஸ் பிப்ரவரி 21,1989 பக்1 ).

மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.

ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன்.

நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவவாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது. இவ்வாறு இஸ்லாம் அசுரபலத்தில் வளர்ந்து கொண்டுருக்கையில் சில விசமிகள் பொருக்க முடியாமல் சில தவறான ஆக்கங்களை நிறுவியும், அவதூறான செய்திகளை பரப்பியும் வருகிறார்கள், நாங்கள் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம் அது இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்,

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள் அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 7:181)

ிருக்குர் ஆன் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக்கூடியதாகவும் இருக்கிறது.

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். (அல்குர்ஆன் 86:13)

இது மட்டுமே இறைவனால் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், முடிவில் எல்லா மதங்களை விடவும் மிகைத்து நின்று வெற்றிபெரும். ஆகவே நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் குர் ஆனில் பல்வேறு வசனங்களின் மூலம் இந்த சமூகத்திற்கு தெளிவுபடுத்துகிறான்,

(நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.( 17:81)

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.( 21:18)

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) இறைவனுடைய பிரகாசத்தை அணைத்து விட விரும்புகின்றனர். எனினும் இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாச்தைப் பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப் போவதில்லை. (சூரா அத்தவ்பா : 32)

Tuesday, March 11, 2008

தயாரித்த போதே குண்டுவெடித்தது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகாயம்

திருவனந்தபுரம்,மார்ச். 11-

திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). சம்பவத்தன்று இரவு உடல் முழுவதும் படுகாயங்களுடன் சுரேஷ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையில் சுரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்பதும், சம்பவத்தன்று அவர் வீட்டில் வெடிமருந்துகள் வைத்து வெடிகுண்டு தயாரித்தப்போது வெடிமருந்துகள் வெடித்ததில் அவர் படுகாயம் அடைந்ததும் தெரிய வந்தது.இந்த விபரங்களை போலீசார் நீதிபதிக்கு அறிக்கை யாக சமர்பித்தனர். அவர் சுரேஷ்குமாரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை நடந்து வருகிறது.வெடிமருந்துகள் பதுங்கி வைத்திருந்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் அவர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

Monday, March 3, 2008

Dozens killed in assault on Gaza

Dozens killed in assault on Gaza


The Israel-Hamas clashes of Saturday were the deadliest in more than a year in the Gaza Strip [AFP]
At least 35 people have been killed in the last 24 hours as Israel continues a major assault in Gaza that has left many children and civilians dead.

The operation in the Jabaliya refugee camp on Saturday marks the deadliest day of fighting in the Hamas-ruled territory for more than a year.
Sixty-eight Gazans have died since the operation - which followed the death of an Israel civilian in a Palestinian rocket attack - began four days ago.

More than 120 Palestinians have also been wounded.

At least 10 of those killed were Hamas fighters and two were from the Islamic Jihad.
Muawiya Hassanein, the head of emergency services in Gaza, said those killed include at least four children and three women.

Israeli troops injured

The Israeli army confirmed its operations in northern Gaza, with the Israel Army Radio reporting that five soldiers were lightly or moderately wounded in the fighting.

The offensive began before dawn when Israeli tanks, supported by helicopters, pushed into the Jabaliya refugee camp in northern Gaza.

Witnesses said the Jabaliya deaths occurred as a result of gun battles between Palestinian fighters and Israeli soldiers.Tariq Dardouna, a Palestinian resident trapped in his house in east Jabaliya, told Al Jazeera that Israeli forces targeted civilians."The Israeli army opens fire at everything in our area, including children and houses. There are injured children bleeding inside their houses," Dardouna said."They are opening fire at everything."

He accused "regional and internal parties" of being involved in the conflict, as well as an "Israeli conspiracy".In Ramallah, Mahmoud Abbas, the president, condemned the escalating Israeli military operation in Gaza, and called for its immediate end.

"It's very regrettable that what is happening is more than a holocaust. We tell the world to see with its own eyes and judge for itself what is happening and who is carrying out international terrorism," Abbas later told reporters.

Comparisons to a "holocaust" apparently refer to remarks made by Matan Vilnai, Israel's deputy defence minister, who earlier used the Hebrew word "shoah" - generally used about the Nazi Holocaust - in remarks to army radio on Friday.

"By intensifying the rocket fire and extending their reach [fighters in Gaza] are bringing onto themselves a worse catastrophe [shoah] as we will use all means to defend ourselves," Vilnai said.

In his press conference, Abbas said: "It is regrettable that Israel uses this word, banned for more than 60 years, the word 'holocaust,' and we demand that the world respond."

An Israeli army spokeswoman said about 20 rockets were fired into Israel on Saturday, including three Soviet-designed Grad missiles, which are more powerful and accurate than locally produced Qassams.

Three Israelis were injured by rockets that reached Ashkelon, a major southern city with a population of 120,000 people.

Israeli leaders earlier said cross-border rocket fire might leave them no choice but to launch a broader military offensive against Hamas.Ehud Barak, Israel's defence minister, said on Thursday that "a major ground operation was real and tangible" and that Israel was "not afraid of it".

Barak's threat of a full-scale invasion came on the same day that an Israeli missile attack killed five children playing football.

Civilians were caught in the crossfire as Israelisoldiers battled fighters in Jabaliya [AFP]Hamas said it has hit Israel with more than 80 rockets during the same three-day period. Ehud Olmert, the Israeli prime minister, has so far been wary of launching a major ground offensive, which could incur heavy casualties and derail US-backed peace talks with Abbas.
But domestic pressure is growing.

Israel's Yedioth Ahronoth newspaper said Barak had sought to prepare the way for an offensive by sending confidential messages to world leaders, including Condoleezza Rice, the US secretary of state, who is due to visit the region next week.


Source: Al Jazeera and agencies

Sunday, March 2, 2008

மனித நீதிப் பாசறையின் மீதும் முஸ்லிம்களின் மீதும் களங்கம் ஏற்படுத்தி வீன்பழி சுமத்தும் வகையில் பொய்யான வெடிகுண்டு வழக்கை ஜோடனை செய்த கோவை போலிஸ்


கிரைன்டர் கண்டன்சரும், பேட்டரியும் பாமாக காட்டப்பட்ட விதம்

இவ்வழக்கு எப்படி ஜோடிக்கப்பட்டது, உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்ட எப்படியெல்லாம் MNP,TMMK,ஐக்கிய ஜமாத் என பல்வேறு அமைப்புகளும் களம் இறங்கி போராடி நியாம் கிடைக்க வழி செய்தன என்பதை தெளிவாக அறிவதற்கு இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் உள்ள கட்டுரைகளை வாசியுங்கள்.

கோவையில் கடந்த ஜீலை (22.07.2006) அன்று 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ழைகது செய்தனர். யாரும் எந்த புகாரும் கொடுக்காத நிலையில் இரவு நேரத்தில் திடீரென அந்த இளைஞர்களின் வீட்டில் அத்து மீறி நுழைந்து அவர்களை கைது செய்து அவர்க்ள வீட்டில் குழந்தைகள் படிக்க வைத்திருந்த வரைபடத்தையும், கிரைன்டர் கண்டன்சரையும், வீணாகிப்போன பேட்டரிகளையும் எடுத்தக்கொண்டு அவர்களை தீவிரவாதிகள் எனவும் அவர்களிடம் இருந்து கோவை மாநகரையே தகர்க்க கூடிய அளவிற்கு சக்தி பெற்ற ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் கோவை மாவட்ட உளவுத்துறை உதவி ஆணையர் ரத்ன சபாபதி கூறினார்.
முஸ்லிம்களுக்கெதிரான குரோதத்தையும், மனித நீதிப் பாசறைக்கெதிரான வண்மத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மனித நீதிப் பாசறையை சேர்ந்தவர்கள் என கதை கட்டினார்.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவை அனைத்தும் வடிகட்டிய பொய் என்பது நிரூபனமானது. தமிழக அரசும் அவர் மீது முதல் கட்ட நடவடிக்கை எடுத்து பணிமாற்றமும், இடமாற்றமும் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மனித நீதிப் பாசறை, கோவை ஐக்கிய ஜமாத், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கடுமையான தொடர் முயற்சிகளால் இவ்வழக்கு விசாரனை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வழக்கு குறித்து விசாரனை நடத்திய சி.பி.சி.ஐ.டி (SIT) சிறப்பு புலனாய்வு குழு தனது இறுதி அறிக்கையை கோவை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.

கோவை உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதி உருவாக்கிய மூன்று தனிப்படைகள் 5 முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்பதும், இந்த மூன்று தனிப்படைகளுக்கு தலைமையேற்ற ஏ.சி க்கள் திரு.குமாரசாமி, திரு. அண்ணாதுரை, திரு. ஜெய பாண்டியன் ஆகியோர்கள் தாங்களே பைப் வெடிகுண்: (Pipe Bomb) மற்றும் கையெறி குண்டு (Hand Granade) ஆகியவற்றை தயார் செய்தள்ளனர் என்பதும் போலிஸ் சாட்சிகள் மற்றும் இதர சாட்சிகள் மூலம் நரூபனம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனையில் முன் தேதியிட்ட ஆவணங்களை ரத்தின சபாபதி தூண்டுதலின் அடிப்படையில் செயல்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் பால்ராஜால் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் BDDS (Bumb Detection and Defuse Squad) எஸ்.ஐ திரு. மகேந்திரன் அவர்கள் வெடிகுண்டைக் கைப்பற்றிய இடத்திற்கு நேரில் வந்ததாகவும் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ததாகவும், மேற்படி இன்ஸ்பெக்டர் பால்ராஜே பொய்யாக மகஜரை (ஆவணங்களை) தயாரித்து அதில் அவரே எஸ்.ஐ மகேந்திரன் கையெழுத்தை போலியாக போட்டுள்ளார் என்பதும் நிபுணர்கள் (Expert opinion) மூலம் நிருபனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், வெடிகுண்டுகளை போலிசாராலேயே தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், ஆவணங்கள் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும் Nacro Analysis Test எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையிலும் நீரூபனம் செய்யப்பட்டுள்ளது.

மனித நீதிப் பாசறையின் கோரிக்கைகள்
1. ரத்தின சபாபதி மற்றும் இதற்கு துனை போன அதிகாரிகளின் கபட நாடகத்தால் தன்னுடைய எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் இந்த அப்பாவிகளுக்கு தமிழக அரசு ஈட்டுத்தொகை வழங்க வேண்டும்.
2. தமிழக காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதற்கு மாறாக "வேலியே பயிரை மேய்வது போல்" ஐந்து முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரத்ன சபாபதி மீதும் மற்றும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த விசாரனை மேற்க்கொள்ளப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக் மேற்க்கொண்டு நரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும்.
3. தமிழக அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் போலியாக புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முஸ்லிம்கள் மீது அவதுர்று சுமத்தி, மனித உரிமைப் பணிகளையும் சமூக சேவைகளையும் செய்து கொண்டு வரும் மனித நீதிப் பாசறையின் மீது களங்கம் கற்பித்து, தமிழகத்தை பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதியை மீண்டும் அதே ஊரில் பணியில் அமர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும், முஸ்லிம்கள் மத்தியில் அடுத்து என்ன நாடகம் அரங்கேறுமோ என்ற அச்சத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு இதை கவணத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.
4. மனித நீதிப் பாசறையின் மீதும் கோவை முஸ்லிம்கள் மீதும் இப்பொய்வழக்கு போடுவதற்கு காரணம் என்ன என்பதையும் இதன் பின்னணியில் தேச விரோத சக்திகளின் தூண்டுதல் உண்டா என்பதையும் தமிழக அரசு கண்டறிந்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராகவும் இப்பொய் வழக்கு மூலம் சாதிக்க நினைத்த மற்றும் தூண்டுதலின் பின்னணி என்ன என்பதை கண்டறிதல் வேண்டும் எனவும் தனது அறிக்கையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் திரு.எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கோரியுள்ளார்கள்.

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 7 பேர் கைது

கடையநல்லூர், பிப். 28:

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றவர்களை போலீஸôர் விரட்டியடித்தனர்.

இந்த மோதலில் போலீஸ் தரப்பில் 4 பேரும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பில் 7 பேரும் காயமடைந்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, போலீஸôரைக் கண்டித்து கடையநல்லூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டிய மனித நீதிப் பாசறை அமைப்பைச் சேர்ந்த அல்லிமூப்பன் தெருவைச் சேர்ந்த அகமது மகன் லுக்மான்ஹக்கீம் (21), சிவகாசியைச் சேர்ந்தவரும் தற்போது கடையநல்லூரில் வசித்து வருபவருமான இக்பால் மகன் அப்துல்காதரையும் (23) கடையநல்லூர் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை இந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடையநல்லூர் பெரியபள்ளிவாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனக்கூறி போலீஸôர் தடுத்தனர். இருப்பினும் அந்த அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீஸôர் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீஸôர் சிலர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸôர் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இந்நிலையில், இப்பிரச்சினையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காவலர்கள் ஞானசிகாமணி (50), வேல்முருகன் (43), ஜெயக்குமார் (31), சுடலை (32) ஆகிய 4 பேர் காயமடைந்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல போலீஸôர் தடியடி நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடையநல்லூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் அரசு மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

Saturday, March 1, 2008

நெல்லை போலீசுக்கு எதிராக போராட்டம் கோவைவை போலீசார் தந்தனர் அனுமதி

கோவை :கோவை போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகநெல்லையில் போஸ்டர் ஒட்டிய நபர்களை, அங்குள்ளபோலீசார் கைது செய்தனர். அதைக் கண்டித்து, கோவையில்ஆர்ப்பாட்டம் நடத்த, கோவை போலீசார் அனுமதி வழங்கி,பாதுகாப்பும் அளித்தனர்.

கோவை மாநகர போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகூடுதல் துணைக்கமிஷனர் ரத்தினசபாபதி பதிவு செய்தவழக்கு, சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றப்பட்டு, கோர்ட்டில்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ரத்தினசபாபதிஉள்ளிட்ட சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வலியுறுத்திநகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

நெல்லை மாவட்டம், கடையநல்லுõரில் சுவரொட்டி ஒட்டியஇருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைக் கண்டித்து, தடையை மீறி அங்கு ஆர்ப்பாட்டம்நடத்த முயன்ற அமைப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கியதாகஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்த சம்பவங்களைக் கண்டித்து, "மனித நீதி பாசறை'அமைப்பினர், கோவை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த, அனுமதிகோரினர்; உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படிநேற்று மாலை காந்திபுரம், தமிழ்நாடு ஓட்டல் முன் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அந்த அமைப்பின்நிர்வாகிகள், கடையநல்லுõர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும்டி.எஸ்.பி., அசோக்குமார் ஆகியோரை கடுமையாக விமர்சித்தனர்.

கோவை நகர போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகூடுதல் துணை கமிஷனர் ரத்தினசபாபதியை பணியில் இருந்து"டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.போலீஸ்அதிகாரிக்கு எதிராக ஒரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த,போலீசாரே அனுமதி அளித்திருப்பது கோவை போலீசாரிடம்அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Monday, February 25, 2008

சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி...


ஏழை, நடுத்தர நாடுகளின் பொருளாதாரத்தைப் பல்வேறு வழிகளிலும் சுரண்டி அதன் மூலம் தனது இராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு வருடங்களில் மிகப் பெரியச் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! பொருளாதாரத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலகின் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று சிறிது சிறிதாக அதே பொருளாதாரத்தின் மூலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.


இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர்கள் ஆக்ரமித்து வந்ததற்கு 21 ஆம் நூற்றாண்டு விடை கூற நெருக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்த அமெரிக்கப் பொருளாதாரம், உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. 2000 நூற்றாண்டின் 80, 90கள் வரை உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயத்தைக் குறித்து உலகம் சிந்திக்காமல் இருந்ததே அமெரிக்காவின் இடைப்பட்ட கால இமாலய எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். இதற்கு யூரோவின் மூலம் முதல் அடியைக் கொடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.


உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயம் என்பதே அப்பொழுது வரை எவரும் மனதில் நினைத்துக் கூடப் பார்க்காத விஷயமாக இருந்தக் கால கட்டம் அது. அன்று விழுந்த முதல் அடியிலிருந்து எழுந்து நிற்க "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பொய்யான முகமூடியுடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு அதுவே நினைத்துப் பார்க்காத பதிலடியைத் திரும்பக் கொடுத்தது எனலாம். இப்பொழுது வரை பின்னணியில் இயங்கியது யார்? என்பதில் எவ்விதத் தெளிவான முடிவுக்கும் வர இயலவில்லை.


வெள்ளை மாளிகையின் தற்போதையக் காவலாளி ஜார்ஜ் புஷ் கூட இதன் பின்னணி கதாநாயகனாக இருக்கலாம். 2001 செப்டம்பர் 11 நிகழ்வைக் காரணம் காட்டி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளைக் கபளீகரம் செய்வதோடு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதுமே அதன் முக்கியக் குறிக்கோளாய் இருந்தது.


அதன் பின்னணியில் சரிந்து வரும் தனது பொருளாதாரத்தைக் குவிந்துக் கிடக்கும் அரபு எண்ணெய் வளம் மூலம் நிமிர வைப்பதைத் தனது மறைமுக நோக்கமாகவும் கொண்டு, தான் வளர்த்து விட்ட உசாமா, சதாம் போன்றவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் களமிறங்கிய புஷ்ஷின் அமெரிக்காவிற்குத் தற்பொழுது அதுவே தாங்கவொண்ணாச் சரிவைப் பரிசாக அளித்துள்ளது.


சரிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தால் மத்தியக் காலகட்டத்தில் அமெரிக்க டாலரை அடித்தளமாக வைத்துத் தங்களின் நாணய மதிப்பையும் வியாபாரத்தையும் அமைத்துக் கொண்ட நாடுகளுக்கு இப்பொழுது அமெரிக்க டாலர் மிகப்பெரிய தலைவலியாகவும், தாங்கவொண்ணா சுமையாகவும் மாற ஆரம்பித்துள்ளது.


இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கழுகுக் கண்களுக்கு இரையாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு உடனடியாகத் தங்களின் அனைத்துப் பண்டமாற்று, உலக வர்த்தக முறைகளையும் அமெரிக்க டாலரிலிருந்து 90-களில் மாற்றாக வெளிவந்த யூரோவிற்கு மாற்றி விட்டன. அத்தோடு அமெரிக்காவின் சுரண்டலுக்கு இலக்கான அனைத்து நாடுகளையும் தங்கள் வர்த்தகப் பரிமாற்றத்தை டாலரிலிருந்து மாற்றக் கோரிக்கை விடுத்தன.


எனினும் அப்பொழுது அதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ளாத கத்தர், சவூதி, அமீரகம் போன்ற அரபு நாடுகள் கடந்த 6 மாத கால அளவில் வரலாறு காணாத அளவில் தங்களின் நாணயமதிப்பில் வீழ்ச்சியையும், வளைகுடா நாடுகளில் கேள்வியே பட்டிராதப் பெரும் பணவீக்கத்தையும் சந்தித்தன. கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலரின் மூலதனம் 16.2 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் எவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்ததோ, அதே அளவிற்கான வீழ்ச்சியை அமெரிக்க டாலர் மூலம் வர்த்தகம் அமைத்துக் கொண்ட மற்ற நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சியைச் சந்தித்தன.


இந்நிலையில் உலக கரட்டு எண்ணெய் (Crude Oil) வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓபெக் தற்பொழுது ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டுத் தங்களின் வர்த்தகத்தை அமெரிக்க டாலரிலிருந்து மாற்றுவதற்கான ஆலோசனை செய்ய முன் வந்துள்ளன.


ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் கோரிக்கையைக் குறித்து விவாதிக்க ஓபெக் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு உடன் கூடும் என ஓபெக் தலைவர் ஷகீப் கலீல் கூறியுள்ளார். உலக எண்ணெய் வியாபாரத்தில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் ஓபெக்கின் இம்முடிவு நினைத்தது போல் அமெரிக்க டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்குத் தனது வியாபாரத்தை மாற்றும் எனில் அது அமெரிக்காவை எழுந்து நிற்க இயலாத நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் மாற்றமில்லை.


ஏற்கெனவே அமெரிக்க டாலர் மூலமான தனது அனைத்து உலக வியாபாரத்தையும் மாற்றியிருந்த ஈரானைப் பின்பற்றி இன்னும் ஆறு மாத காலத்தில் கத்தரும் தனது எல்லாவிதமான வணிகப் பரிமாற்றத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றும் என கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல்-தானி கூறியிருந்தார்.


அதே போன்று குவைத்தும் அமீரகமும் இதே திசையில் பயணிக்கவிருப்பதைக் குறித்த அறிகுறிகளைத் தெரிவித்திருந்தன.


உலக வர்த்தகத்தின் மிகப் பெரும்பங்கை நிர்ணயிக்கும் அரபு நாடுகளும் உலக எண்ணெய் உற்பத்தியின் 40 விழுக்காட்டை நிர்ணயிக்கும் ஓபெக்கும் தங்களின் இம்முடிவுகளில் எவ்வித மாற்றமும் இன்றி அமெரிக்க டாலரிலிருந்து மாறும் எனில் அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் சீரழிவை ஏற்படுத்துவதோடு உலக நலனுக்குத் தீங்கான அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் நிச்சயம். அது உலகின் தற்போதைய உறுதியற்ற நிலையையும் மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.


Thanks : சத்தியமார்க்கம்.காம்

06. தூக்கிப் போட்ட கிரெடிட் கார்டு கிளப்பிய பூதம் : 50 ஆயிரம் ரூபாய் கட்ட வங்கி ஓலை

மும்பை:

`சே! கிரெடிட் கார்டை கண் டாலே எரிச்சலா வருது...அப்படியிருக்கும் போது, எனக்கு கிரெடிட் கார்டை எப்படி வங்கி அனுப் பியது...?' என்று எரிச்சல் பட்டு கிரெடிட் கார்டை , வெறுப்பில் தூக்கி குப்பைத் தொட்டியில் தப்பித்தவறிக் கூட போடாதீர்கள்!

குப்பைத்தொட்டியில் போட்ட கிரெடிட் கார்டு, கல்லூரி பேராசிரியருக்கு பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபலக் கல்லூரியின் பேராசிரியர் இமானுவேல். வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், ஏ.டி.எம்.,கார்டு வாங்கிக்கொள்ளவில்லை. வங் கிக்கு சென்றுதான், `பாஸ்' புத்தகத்தை தந்து, பணம் எடுப்பார்; பணம் எடுத்ததும், கணக்கு சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்வார்.

இவருக்கு சில மாதம் முன், மொபைல் போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய பெண்,` உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா சார்? ஆண்டு சந்தா இலவசம் சார்' என்று குழைய குழைய பேசினார். பேராசிரியரோ கடும் கோபத்துடன் , `கிரெடிட் கார்டில் எனக்கு நம்பிக்கை இல்லை; எனக்கு வேண்டாம்' என்று மறுத்துவிட்டார்.

ஆனால், அடுத்த சில நாளில், அவர் பெயருக்கு ஒரு தபால் வந்தது. கூரியர் ஊழியர் அதை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். கவரை பிரித்துப் பார்த்தவருக்கு கடுங்கோபம்; `கிரெடிட் கார்டை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டார்.

அத்தோடு அந்த விஷயத்தை மறந்தும் விட்டார். அடுத்த ஒரு மாதத்தில், வங்கியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. `உங்களுக்கு அளிக்கப்பட்ட கிரெடிட் கார்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது; அதை 45 நாட்களுக்குள் திருப்பிக் கட்டவேண்டும்' என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதைப்பார்த்ததும், பேராசிரியருக்கு வந்ததே... உச்சகட்ட கோபம், நேராக வங்கிக்கு போனார். அதிகாரியை சந்தித்து,`நான் கேட்காமலேயே கிரெடிட் கார்டு தந்தீங்க; எனக்கு வேண்டாம் என்று அதை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டேனே; அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அதை பயன்படுத்தியதற்கு ஆதாரம் உண் டா?' என்று சண்டை போட்டார்.

`சார், நீங்க கையெழுத்து போட்டு, கிரெடிட் கார்டை வாங்கியிருக்கிறீர்கள்;அப்படியானால்,அதை நீங்கள் தான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று தான் எங்களால் உணர முடியும். யாராவது உங்கள் கார்டை பயன்படுத்தி இருப்பதாக நினைத்தால், முன்னதாக புகார் தந்திருக்கலாம்' என்று அதிகாரி விளக்கம் சொல்ல, பேராசிரியர் தலையில் `ஜிவ்வ்' என்று ஏறிவிட்டது.

குப்பைத்தொட்டியில் போட்ட கிரெடிட் கார்டை யாரோ எடுத்து, சட்டவிரோதமாக பயன்படுத்தி, 50 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து நுகர்வோர் கோர்ட்டுக்கு போவதா, பணத்தை கட்டுவதா என்று குழம்பிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர்.இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில்,`கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது மிகவும் உஷராக இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு வேண்டாம் என்று எண்ணினால், அதை கூரியர் ஊழியரிடம் இருந்து வாங்காமல் திருப்பி அனுப்பிவிடலாம். கையெழுத்திட்டு வாங்கிவிட்டு, அதை மறந்துவிட்டால், அதை யாராவது பயன்படுத்த நேரிடும். அது தான் பேராசிரியருக்கு ஏற்பட்ட விபரீதத்துக்கு காரணம்' என்று தெரிவித்தனர்.

Thanks : Dinamalar

760 கோடி ஆண்டுகளில் பூமி 'புஸ்'!


லண்டன்: இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது. அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும்.
சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது, எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.
இதைத் தவிர்க்க முடியாதா, பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில், இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.
வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை, பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து, அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.
இது சாத்தியமா, பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது.
இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.
பூமியையே இடம் மாற்றும் தொழில்நுட்பமா.. தலை சுத்துது!!

இந்தியாவில் கொலை குற்றவாளி அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக ஏழு பேர் கைது

February 25th, 2008

இந்தியாவில் கொலை குற்றவாளி ஒருவரை அவர் சுயநினைவை இழக்கும் வரையில் பொலிஸாரின் முன்னிலையிலேயே ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த அந்நபரை வெளியே இழுத்து வந்த கும்பல் அவரை அடித்து துவம்சம் செய்துள்ளது.

இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான காட்சியில், கயிறு ஒன்றின் மூலம் கட்டி இழுத்து வரப்பட்ட அவரது உடலில் அசைவுகள் நிற்கும் வரையில் அவரை கும்பல் அடித்து உதைத்து நொறுக்கியுள்ளது. தற்போது அந்நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: தமிழ் பிபிசி

Saturday, February 23, 2008

பீகாரில் செல்போன் திருடன் அடித்துக் கொலை


ஹாஜிபூர், பிப்.24-

பீகாரில் செல்போன் திருடனை போலீசார் முன்னிலையிலேயே ஒரு கும்பல் கொடூரமாக அடித்துக் கொன்றது.

நெஞ்சைப் பதறச் செய்யும் இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நண்பர்கள்

பீகார் மாநிலம் ஹாஜிபூரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது நண்பர் ஓம்பிரகாஷ். வாலிபர்
களான இவர்களுக்குள் செல் போன் திருட்டு தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த ரவிகுமார் ஓம்பிரகாஷை தாக்கி விட்டார்.

இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஓம்பிரகாசின் நண்பர்களும் உறவினர்களும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரவிகுமாரை கை, கால்களை கட்டி வெளியே தரதரவென இழுத்து வந்தனர். அவரை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் அந்த கும்பலிடம் இருந்து ரவிகுமாரை மீட்டு படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அடித்துக் கொலை

அதன் பின்னரும் அந்தக் கும்பல் விடவில்லை. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரவிகுமாரை நடு ரோட்டுக்கு இழுத்து வந்தனர். கைகளாலும், செங்கற்கல்லாலும், தடியாலும் சரமாரியாக அடித்து நையப்புடைத்தனர். ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ரவிகுமார் சிறிது நேரத்தில் துடிதுடித்து செத்தார். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்தப் படுகொலை நேற்று இரவில் அனைத்து தொலைக் காட்சிகளிலும் ஒளி
பரப்பானது. அதைப் பார்த்து பரிதாபப்படாதவர்களே இருக்க முடியாது.

சஸ்பெண்டு

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி சில போலீஸ்
காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி கண்டனம்

இதற்கிடையே டெல்லியில் நீதித்துறை சீரமைப்பு தொடர்பான கருத்தரங்கு நேற்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கருத்தரங்கை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ``குற்றவாளியை தண்டிக்க சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அது போன்ற கலாசாரத்தை அனுமதிக்கவும் முடியாது'' என்று குறிப்பிட்டார்.


Thanks : Daily Thanthi

Friday, February 22, 2008

தேவையில்லை இனி இவர்களும் இவர்களின் பொருட்களும்

நபி (ஸல்) அவர்களை நேசிக்கும் உண்மையான முஸ்லிம்களுக்காக........

வாங்காதீர்கள் டென்மார்க்கின் பொருட்களை.....










நன்றி : Irai Adimai (Photos)

Thursday, February 21, 2008

மண்ணறை வாழ்க்கை

மண்ணறை வாழ்க்கை

K.L.M. இப்ராஹீம் மதனீ

உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, "மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென" அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ, "மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது" என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை 'இல்லிய்யீனிலே' (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள "ஸிஜ்ஜீன்" (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ

இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31) இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.

(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)

இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கைமரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.

கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.
யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் "என் இறைவன் அல்லாஹ்" என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் "என் மார்க்கம் இஸ்லாம்" என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.

(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள்.(முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். 'மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்' என்று அவர்களிடம் கூறப்படும். (புகாரி, முஸ்லிம்)

ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், "(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்" எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், "(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!" என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு "கீராத்" நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு "கீராத்" நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.

கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?

1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.

கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.

Thanks : Islamkalvi

Wednesday, February 20, 2008

வருடந்தோறும் 10 லட்ச மக்களை கொல்லும் அரக்கன்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மக்கள் புகையிலை என்னும் அரக்கனுக்கு அடிமைபட்டு பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை எந்த வடிவில் பயன் படுத்தினாலும் அது பயன்படுத்துவோரின் உயிருக்கு அபத்தாக முடியும். 10ல் ஒரு பகுதி ஆண்களின் மரணத்திற்கு புகை பிடிப்பது முக்கிய காரணமாக இருப்பதாக அய்வுகள் தெரிவிக்கின்றன.புகைபிடிப்பதால் மரணமடையும் 10 லட்சம் மக்களில் 70 சதவீதம் பேர் இளவயதிலேயே மரணத்தை தழுவு கிறார்கள் ஊனவும் இந்த அதிர்ச்சி செய்தி குறிப்பிடுகிறது.

யார் சிகரெட்டை தொடர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள். பீடி புகைக்கும் ஆண்கள் 6 ஆண்டுகளை தங்கள் வாழ்நாளில் இழக்கிறார்கள். பீடி புகைக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 8 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் மரணத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பான A Nationally Representative Care - Control - Study of Smoking and Death in India வும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் The New England Journal of Medicine பத்திரிக்கையும் இணைந்து அந்த ஆய்வினை மேற்கொண்டன.பொதுவாக ஆண்களில் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்கும்போது 30 முதல் 69 வயது வரை மரணம் அடைபவர்களில் கணிசமானோர் புகை பிடிப்பவர்கள்தான் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2010அம் ஆண்டில் இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஒன்று புகைப் பிடிப்பதால் நிகழும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியாவில் 60 கோடி மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் அவர். நமது இளைய தலைமுறையை புகையிலை அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி யுள்ளது,அதற்கென சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தி மரணமடைபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் வெறும் இரண்டு சதவீதம் தான். அனால், சீனாவில் 9 சதவீதத்தினர் தங்களை புகை பிடிப்பதிலிருந்து மீட்டுக் கொண் டுள்ளனர்.

பிரிட்டனில் புகை பிடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். இது 20 அண்டு காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகும். 2003ல் ஜெனிவாவில் கூடிய மாநாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தங்கள் நாடுகளில் பின்பற்றப்போவதாக 183 நாடுகள் அறிவித்திருக்கின்றன.

நன்றி: தமுமுக இணையம்
Thanks : Satrumun

Monday, February 18, 2008

கைதி மனைவி கற்பழிப்பு, ஆபாச படம் எடுத்த போலீஸ்-கோர்ட் கண்டனம்

சென்னை: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியின் மனைவியை சிறைக் காவலர்கள் நான்கு பேர் கற்பழித்ததாக கூறப்படுவது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி அளித்த அறிக்கை திருப்தி தரும் வகையில் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் சிறையில் 10 ஆண்டு சிறைத் தண்டனையின் கீழ் அடைக்கப்பட்டுள்ளவர் கணேசன். கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி சிறைக்கு வந்த அவரது மனைவி நதியா, கணவரை சந்தித்து விட்டு வீடு திரும்பினார்.

அப்போது அவரை வழியில் மிரட்டி, மோட்டார் சைக்கிளில் சிறை வார்டன் மகேந்திரன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மகேந்திரன் வீட்டில் வைத்து நதியாவை துணை ஜெயிலர் தமிழ்ச்செல்வன், சிறை வார்டர்கள் பாலமுருகன், மூர்த்தி ஆகியோர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதை ஆபாசப் படமாகவும் எடுத்துள்ளனர். வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பொங்கலுக்கு புத்தாடையுடன் வருவதாக கூறிச் சென்ற நதியா, அதன்படி வராததால் குழப்பமடைந்த கணேசன், தனது மனைவி என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவருக்கு சிறைக் காவலர்களால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். எனவே அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.டி.தினகரன், ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சிறைக்கு நேரில் சென்று கணேசனிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்றும் அதை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்னர்.

மேலும் சிறைத்துறை கூடுதல் டிஜிபி இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டனர்.

அதன்படி இருவரும் விசாரணை மற்றும் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்தனர். நேற்று வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை கூடுதல் டிஜிபியின் அறிக்கைக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், கூடுதல் டி.ஜி.பி. தாக்கல் செய்த அறிக்கை மீது நாங்கள் திருப்தி அடையவில்லை. கூடுதல் டி.ஜி.பி. விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம்.

ஆனால் அந்த உத்தரவின் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை.ஒரு சிறைக் கைதி தந்த புகாரானது சீருடை பணியாளர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இப்படிப்பட்ட புகாரை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. களங்கத்தை நீக்குவது போலீஸ் அதிகாரிகளின் கடமையாகும். இதுபற்றி நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.கூடுதல் டி.ஜி.பி. நேரில் சென்று விசாரணை செய்து, அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறியிருந்தோம். ஆனால், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ராஜசவுந்தரியை விசாரணை நடத்த சொல்லி, அவரது அறிக்கையை பெற்று கூடுதல் டி.ஜி.பி. அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.இந்த அறிக்கை முழுமையாக இல்லை.

இந்த அறிக்கையில் நாங்கள் திருப்தி அடையவில்லை.சிறையில் இருந்த கணவரை பார்த்துவிட்டு வெளியில் திரும்பியபிறகு கற்பழிப்பு சம்பவம் நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கடந்த மாதம் 24ம் தேதி ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது கணேசன் தனது மனைவிக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து புகார் கூறியுள்ளார். 4 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

புகாரை பெற்ற கூடுதல் டி.ஜி.பி. 7 நாட்கள் கழித்து அதிகாரியை நியமித்து துறைரீதியாக விசாரிக்க மட்டும் உத்தரவிட்டுள்ளார். எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. புகாரின் கடுமையை புரிந்துகொள்ளாமல் துறை ரீதியான விசாரணைக்கு மட்டும் உத்தரவிட்டுள்ளார்.புகார்களுக்கு ஆளான 4 சிறை அதிகாரிகளின் வாக்குமூலம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெண்ணை ஆஜர்படுத்துமாறு உள்ளூர் போலீசாருக்கு அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த பிறகும், இந்த விஷயத்தில் எந்தவிதமான, கணிசமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அறிக்கையை பார்க்கும்போது 4 சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கத்தையும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இந்த கற்பழிப்பு புகாரில் அதிகம் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. பெண் காணாமல் போனதாக மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனவே, உள்துறை செயலாளர் டி.ஜி.பி.க்கு தக்க உத்தரவை பிறப்பித்து, எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒருவரை நியமித்து இந்த புகார் குறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.

சரியான முறையில் குற்றப்பதிவு செய்து வேலூர் தாலுகா போலீசார் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Thanks : Thatstamil

முஸ்லிம்கள் வெளியேறி ஒர் ஆண்டு நிறைவு


மூதூர் முஸ்லிம் அகதிகள்


இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதுர் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அதனையடுத்து மூதூர் நகருக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.


அதனையடுத்து கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் மக்கள் இடப்பெயர்வுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் மக்களும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்தது.இந்த நிலையில் மூதூர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் முழுமையாக மீளக் குடியேறிவிட்ட போதிலும், தமிழ் மக்களில் கணிசமானோர் இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை.


ஆயினும் அங்கு தமிழ்- முஸ்லிம் உறவுகள் சீரடைந்துள்ளதாக அப்பகுதி முக்கியஸ்தர்கள் கூறுகிறார்கள்.அங்கு இந்தக் காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அக்ஷன் பெயிம் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைக்கான சூத்திரதாரிகள் குறித்த வழக்கு விசாரணைகளும் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.


Thanks : Arinthathai solkiren