
ஹாஜிபூர், பிப்.24-
பீகாரில் செல்போன் திருடனை போலீசார் முன்னிலையிலேயே ஒரு கும்பல் கொடூரமாக அடித்துக் கொன்றது.
நெஞ்சைப் பதறச் செய்யும் இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நண்பர்கள்
பீகார் மாநிலம் ஹாஜிபூரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது நண்பர் ஓம்பிரகாஷ். வாலிபர்
களான இவர்களுக்குள் செல் போன் திருட்டு தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த ரவிகுமார் ஓம்பிரகாஷை தாக்கி விட்டார்.
இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஓம்பிரகாசின் நண்பர்களும் உறவினர்களும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரவிகுமாரை கை, கால்களை கட்டி வெளியே தரதரவென இழுத்து வந்தனர். அவரை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் அந்த கும்பலிடம் இருந்து ரவிகுமாரை மீட்டு படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அடித்துக் கொலை
அதன் பின்னரும் அந்தக் கும்பல் விடவில்லை. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரவிகுமாரை நடு ரோட்டுக்கு இழுத்து வந்தனர். கைகளாலும், செங்கற்கல்லாலும், தடியாலும் சரமாரியாக அடித்து நையப்புடைத்தனர். ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ரவிகுமார் சிறிது நேரத்தில் துடிதுடித்து செத்தார். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்தப் படுகொலை நேற்று இரவில் அனைத்து தொலைக் காட்சிகளிலும் ஒளி
பரப்பானது. அதைப் பார்த்து பரிதாபப்படாதவர்களே இருக்க முடியாது.
சஸ்பெண்டு
இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி சில போலீஸ்
காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி கண்டனம்
இதற்கிடையே டெல்லியில் நீதித்துறை சீரமைப்பு தொடர்பான கருத்தரங்கு நேற்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கருத்தரங்கை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, ``குற்றவாளியை தண்டிக்க சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அது போன்ற கலாசாரத்தை அனுமதிக்கவும் முடியாது'' என்று குறிப்பிட்டார்.
Thanks : Daily Thanthi
No comments:
Post a Comment