February 25th, 2008
இந்தியாவில் கொலை குற்றவாளி ஒருவரை அவர் சுயநினைவை இழக்கும் வரையில் பொலிஸாரின் முன்னிலையிலேயே ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த அந்நபரை வெளியே இழுத்து வந்த கும்பல் அவரை அடித்து துவம்சம் செய்துள்ளது.
இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான காட்சியில், கயிறு ஒன்றின் மூலம் கட்டி இழுத்து வரப்பட்ட அவரது உடலில் அசைவுகள் நிற்கும் வரையில் அவரை கும்பல் அடித்து உதைத்து நொறுக்கியுள்ளது. தற்போது அந்நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி: தமிழ் பிபிசி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment