கோவை :கோவை போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகநெல்லையில் போஸ்டர் ஒட்டிய நபர்களை, அங்குள்ளபோலீசார் கைது செய்தனர். அதைக் கண்டித்து, கோவையில்ஆர்ப்பாட்டம் நடத்த, கோவை போலீசார் அனுமதி வழங்கி,பாதுகாப்பும் அளித்தனர்.
கோவை மாநகர போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகூடுதல் துணைக்கமிஷனர் ரத்தினசபாபதி பதிவு செய்தவழக்கு, சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றப்பட்டு, கோர்ட்டில்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ரத்தினசபாபதிஉள்ளிட்ட சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வலியுறுத்திநகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
நெல்லை மாவட்டம், கடையநல்லுõரில் சுவரொட்டி ஒட்டியஇருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதைக் கண்டித்து, தடையை மீறி அங்கு ஆர்ப்பாட்டம்நடத்த முயன்ற அமைப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.
போலீசை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கியதாகஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்த சம்பவங்களைக் கண்டித்து, "மனித நீதி பாசறை'அமைப்பினர், கோவை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த, அனுமதிகோரினர்; உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படிநேற்று மாலை காந்திபுரம், தமிழ்நாடு ஓட்டல் முன் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அந்த அமைப்பின்நிர்வாகிகள், கடையநல்லுõர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும்டி.எஸ்.பி., அசோக்குமார் ஆகியோரை கடுமையாக விமர்சித்தனர்.
கோவை நகர போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகூடுதல் துணை கமிஷனர் ரத்தினசபாபதியை பணியில் இருந்து"டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.போலீஸ்அதிகாரிக்கு எதிராக ஒரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த,போலீசாரே அனுமதி அளித்திருப்பது கோவை போலீசாரிடம்அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment