Tuesday, March 11, 2008

தயாரித்த போதே குண்டுவெடித்தது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகாயம்

திருவனந்தபுரம்,மார்ச். 11-

திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). சம்பவத்தன்று இரவு உடல் முழுவதும் படுகாயங்களுடன் சுரேஷ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையில் சுரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்பதும், சம்பவத்தன்று அவர் வீட்டில் வெடிமருந்துகள் வைத்து வெடிகுண்டு தயாரித்தப்போது வெடிமருந்துகள் வெடித்ததில் அவர் படுகாயம் அடைந்ததும் தெரிய வந்தது.இந்த விபரங்களை போலீசார் நீதிபதிக்கு அறிக்கை யாக சமர்பித்தனர். அவர் சுரேஷ்குமாரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை நடந்து வருகிறது.வெடிமருந்துகள் பதுங்கி வைத்திருந்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் அவர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

No comments: